For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதியிடம் இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

Sonia Gandhi and Prathibha patil
டெல்லி: மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் இடதுசாரி்க் கட்சித் தலைவர்கள் இன்று கடிதம் அளித்தனர்.

இன்று ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக், ஆர்எஸ்பி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றதாக கடிதம் தந்ததுடன், மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு மத்திய அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதே போல பாஜகவும் மத்திய அரசை மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உடனே உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக் கட்சியின் தலைவர் அத்வானி கூறுகையில்,

இப்போது மத்திய அரசு மைனாரிட்டியாகிவிட்டது. இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்த குறித்து மைனாரிட்டி அரசு பேசக் கூடாது. ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஜனாதிபதி உத்தரவிட வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X