For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜனாதிபதியிடம் இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் கடிதம்
இன்று ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக், ஆர்எஸ்பி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றதாக கடிதம் தந்ததுடன், மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு மத்திய அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதே போல பாஜகவும் மத்திய அரசை மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உடனே உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக் கட்சியின் தலைவர் அத்வானி கூறுகையில்,
இப்போது மத்திய அரசு மைனாரிட்டியாகிவிட்டது. இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்த குறித்து மைனாரிட்டி அரசு பேசக் கூடாது. ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஜனாதிபதி உத்தரவிட வேண்டும் என்றார்.
Comments
Story first published: Wednesday, July 9, 2008, 13:17 [IST]