For Daily Alerts
Just In
எழும்பூர் ரயில் நிலையத்தில் எலும்புக் கூடு!
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார சீரமைப்பின்போது 2 மண்டை ஓடுகளும், ஒரு எலும்புக்கூடும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எழும்பூர் ரயில் நிலையத்தின் 8வது பிளாட்பாரம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான கட்டுமானப் பணியின்போது இன்று அங்கு ஒரு எலும்புக் கூடும், இரண்டு மண்டை ஓடுகளும் சிக்கின.
இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து எலும்புக் கூட்டையும், மண்டை ஓடுகளையும் மீட்டனர்.
எலும்புக் கூடு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அப்பகுதியில், வேறு ஏதேனும் மண்டை ஓடுகளோ, எலும்புக் கூடுகளோ புதைந்திருக்கிறதா என்றும் சோதனையிடப்படுகிறது.
Comments
Story first published: Friday, July 11, 2008, 14:33 [IST]