மாணவர்களுக்கு மொட்டை-ஆசிரியை கைது!
தஞ்சாவூர்: முடி வெட்டாமல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியை மொட்டை அடித்தார். இதையடுத்து அந்த ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் அறிவழகன் (12). உதாரமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆதிசிவலிங்கம். இவரது மகன் உதயகுமார் (12). இவர்கள் இருவரும் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
திங்கள் கிழமை அன்று வழக்கம் போல் இந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால் அந்த மாணவர்கள் நீளமாக முடி வைத்திருந்தார்கள் என்று கூறி பள்ளி ஆசிரியை ரெஜினா அந்த மாணவர்களுக்கு மொட்டை போட்டார்.
அப்போது மாணவர்களின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு விட்டது. மொட்டை போட்ட தலையுடன் வீட்டுக்கு வந்த மாணவர்கள் நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து இரு மாணவர்களின் பெற்றோர்களும் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். ஆனால் ஆசிரியை மீது பள்ளி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் உதயகுமார், அறிவழகன் ஆகியோரது பெற்றோர்கள் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆசிரியை ரெஜினாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அந்த ஆசிரியை பள்ளியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications