பகுஜன் சமாஜ் கட்சியுடன் இடதுசாரிகள் கூட்டணி!

நம்பிக்ைக வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைமையிலான அரசை தோற்கடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து இடதுசாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு முயற்சிகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.
அதில் ஒரு படியாக, மாயாவதியுடன் இடதுசாரிகள் கை கோர்த்துள்ளனர். இன்று பகுஜன்சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதியை பிரகாஷ் காரத் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவரும், மாயாவதியும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரகாஷ் காரத் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வரவுள்ள நம்பிக்ைக வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக இணைந்து செயல்பட இடதுசாரிகளும், பகுஜன் சமாஜ் கட்சியும் முடிவு செய்துள்ளோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை மக்கள் முன்பு அம்பலப்படுத்தும் பிரசாரத்தில் இடதுசாரிகளும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து செயல்படும்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான மாயாவதியின் நிலை மிகவும் பாராட்டுக்குரியது. அதை வரவேற்கிறோம்.
ஜோதிபாசுவை, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது என்றார் காரத்.












Click it and Unblock the Notifications