புதுச்சேரி, குற்றம், தற்கொலை, கணவன், மனைவி
புதுச்சேரி: மனைவி தன்னுடன் வாழ வர மறுத்ததால் விரக்தி அடைந்த கணவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (34). இவரது மனைவி ஜோதி. அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவார் ஜம்புலிங்கம். இதனால் ஜோதி அவருடன் சண்டை போட்டு வந்தார்.
சில நாட்களுக்கு முன்பும் இப்படி ஒரு சண்டை நடந்தது. இதையடுத்து கோபித்துக் கொண்டு குருவிநத்தத்தில் உள்ள தனது அம்மா வீட்டுக்குப் போய் விட்டார் ஜோதி.
நேற்று மாலை குருவிநத்தம் சென்ற ஜம்புலிங்கம், நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு ஜோதியை அழைத்துள்ளார். ஆனால் ஜோதி வர மறுத்து விட்டார்.
இதனால் மனம் உடைந்த ஜம்புலிங்கம், மாமானர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு, வருகிறாயா இல்லையா, இல்லாவிட்டால், தீவைத்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.
ஆனால் ஜோதியோ தனது பிடிவாதத்திலிருந்து இறங்கவே இல்லை.இதையடுத்து தீக்குச்சியை கிழித்து உடல் மீது பற்றவைத்தார் ஜம்புலிங்கம்.
தீயின் வெம்மை தாளாமல் வீட்டை விட்டு ஓடினார். அங்ககுமிங்கும் ஓடியபடி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் இன்று காலை ஜம்புலிங்கம் சிகிச்ைச பலனளிக்காமல் உயிரிழந்தார்.
--












Click it and Unblock the Notifications