ஆட்சியை காக்க சிபு சோரனுக்கு அமைச்சர் பதவி?
Subscribe to Oneindia Tamil

இரண்டு கொலை வழக்குகள், கடத்தல் என கிரிமினல் நடவடிக்கைகளுக்கு பேர் போனவர் சிபு. இந்த வழக்குகளால் இவர் மத்திய அமைச்சர் பதவியை விட்டு விலக நேர்ந்தது.
கொலை வழக்கில் கைதாகி பின்னர் விடுதலையானதால் இவருக்கு மத்திய அமைச்சர் பதவியைத் தர காங்கிரஸ் மறுத்து வந்தது. இவரும் தொடர்ந்து அமைச்சர் பதவி கேட்டு நிர்பந்தம் செய்தபடியே இருந்தார்.
இந் நிலையில் மத்திய அரசு தப்பிக்க வேண்டுமானால் 5 எம்பிக்களை கையில் வைத்துள்ள சிபு சோரனின் ஆதரவு கட்டாயம் தேவை என்ற நிலை உள்ளது.
இப்போது தனக்கு அமைச்சர் பதவி தந்தால் ஆதரவு என்று தெளிவாகக் கூறிவிட்டார் சோரன். இதையடுத்து மீண்டும் இவரை அமைச்சரவையில் சேர்க்க காங்கிரஸ் தயாராவிட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications