ரூ.2 கோடி மோசடி: தேவர் பேரவை பிரமுகர் கைது
நெல்லை: ஆந்திர மாநில தொழிலதிபரை ரூ.2 கோடி வரை மோசடி செய்த வழக்கில் தேவர் பேரவை இளைஞர் அணித் தலைவர் எஸ்ஆர் தேவரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் ஐதாராபாத்தை சேர்ந்தவர் வெங்டேஷ்வர ரெட்டி. தொழிலதிபரான இவர் தாத்தரி குரூப் ஆப் கம்பெனியை நடத்தி வருகிறார்.
தனது நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக வெங்கடேஷ்வர ரெட்டி ரூ.100 கோடி கடன் கேட்டு நெல்லை சந்திப்பு சிஎன் கிராமத்தை சேர்ந்த சேதுராமபாண்டியன், காரைக்குடி எஸ்ஆர் தேவர் ஆகியோரை அணுகினார்.
பின்னர் அதற்கு கமிஷனாக ரூ.2 கோடி கொடுத்தார். ஆனால் ரூ.100 கோடி கடன் கிடைக்காததால் வெங்கடேஷ்வர ரெட்டி தான் கொடுத்த ரூ.2 கோடியை திருப்பி கேட்டார்.
அவர்கள் கொடுக்காததால் இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதாவிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து மாநகர குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தி சேதுராமபாண்டியன், அவரது உதவியாளர் ராஜேஷ், பேரன் மூர்த்தி, எஸ்ஆர் தேவர், ராமகிருஷ்ணன், ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் எஸ்ஆர் தேவரை போலீசார் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பிடித்து விசாரித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று அவரை கைது செய்தனர்.
இதையடுத்து எஸ்ஆர் தேவரை போலீசார் நெல்லை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர். இவர் தேவர் பேரவை இளைஞரணி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications