மலேசியா: அன்வர் கைது-ஜாமீனில் விடுதலை
கோலாலம்பூர்: தனது உதவியாளருடன் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மலேசிய எதிர்க்கட்சியான கெடிலான் ரக்காயத் கட்சியின் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான இப்ராகிம் அன்வர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மலேசிய முன்னாள் பிரதமரான இப்ராகிம் அன்வரிடம் உதவியாளராக இருந்தவர் முகம்மது சைபுல் புகாரி அஸ்லன் (23). இவர் ஜூன் 28ம் தேதி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் ஜூன் 26ம் தேதி அன்வர் தன்னிடம் கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கை மேற்கொண்டதாக கூறியிருந்தார்.
இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நேற்று அன்வரை கைது செய்தனர். அதன் பின்னர் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து அன்வரின் வழக்கறிஞர் சங்கர நாயர் கூறுகையில், மீண்டும் அன்வரை கைது செய்ய மாட்டோம் என போலீஸார் உறுதியளித்துள்ளனர். எனது கட்சிக்காரர் மீது போலீஸார் குற்றச்சாட்டு எதையும் பதிவு செய்யவில்லை என்றார்.
இதேபோன்ற ஓரினச் சேர்க்கை புகாரில் சிக்கிய அன்வர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பின்னர் அன்வருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவரை கோர்ட் விடுதலை செய்தது.
மலேசிய ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிரமாக போராடி வருபவர் அன்வர். கடந்த பொதுத் தேர்தலில் அவரது கட்சிக்கு பெரும் வெற்றிகிடைத்தது என்பதும் நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications