சமாஜ்வாடி கூட்டம்-39ல் 16 எம்.பிக்களே வருகை-கட்சி உடைகிறது?

ஜூலை 22ம் தேதி லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படவுள்ள நிலையில் சமாஜ்வாடி கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் இன்று டெல்லியில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கு கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தலைமை வகித்தார். அமர்சிங்கும் உடன் இருந்தார்.
இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மொத்தம் உள்ள 39 எம்.பிக்களில் வெறும் 16 பேரே வந்திருந்தனர்.
39 பேரில் அதீக் அகமது, அப்சல் அன்சாரி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜ் பாபரும், பேனி பிரசாத் வர்மாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முனவர் உசேன் அதிருப்தி எம்.பி ஆவார். அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஏற்கனவே அவர் டிக்ளேர் செய்து விட்டார். அதேபோலத்தான் ராஜ்நாராயணன் புதோலியா, ஜெய் பிரகாஷ் ஆகியோரும் அறிவித்துள்ளனர்.
கீர்த்தி வர்தன் சிங், மோகன் சிங், ரேவதி ரமன் சிங் ஆகியோர் கடந்த கூட்டத்திற்கு வராமல் இருந்தனர். ஆனால் இப்போதைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் வெறும் 16 பேரே வந்துள்ளால் சமாஜ்வாடி கட்சி உடைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இந்தச் சூழ்நிலையில், ஜூலை 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் நடைபெறும் நம்பிக்கை வாக்கு தொடர்பான கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கட்சி எம்.பிக்களுக்கு சமாஜ்வாடி கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications