எருமை ரத்தம் குடித்து குழந்தைகள் நேர்த்திக்கடன்!
திருவாடானை: சிவகங்கை மாவட்டம் திருவாடானையில் நடந்த ஆடி திருவிழாவில் எருமை ரத்தத்தைக் குடித்து குழந்தைகள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவாடானையில் உள்ள சமத்துவபுரம் அருகே நரிக் குறவர்கள் காலனி உள்ளது. இங்கு 36 குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் ஊசி, பாசி விற்பனை செய்து வசித்து வருகிறார்கள். இவர்கள் பத்திரகாளியம்மன், மீனாட்சி அம்மன், அய்யனார், பாண்டி உள்ளிட்ட குலதெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள்.
இதில் அருளாந்து என்பவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைமுறை, தலைமுறையாக பத்திரகாளி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடித் திருவிழா கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக காரைக்குடியில் இருந்து பத்திரகாளியம்மன் உருவ வெள்ளி சிலையை செய்து நேற்று முன்தினம் ஊர்வலமாக திருவாடானைக்கு எடுத்து வந்தனர். உடன் நேர்த்திக்கடன் செலுத்த 2 எருமை மாடுகளையும் அலங்கரித்து அழைத்து வந்தனர்.
இதைதொடர்ந்து நேற்று முன் தினம் ஆடி மாத பிறப்பையொட்டி அதிகாலை 4 மணிக்கு பத்திரகாளியம்மனுக்கு 2 எருமை மாடுகளை பலி கொடுத்தனர். அப்போது எருமை மாட்டில் இருந்து பீறிட்டு வெளியேறிய ரத்தத்தால் சாமி சிலைக்கு அபிஷேகம் செய்து அருளாந்து குடும்பத்தை சேர்ந்த முத்தையா, ஆரோக்கியம், இருதயம், பாக்கியராஜ், மைகேல் ஆகியோர் ரத்தத்தை குடித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களது குழந்தைகள் குமரேசன், அன்புராசா, கணேஷ், விக்ரம், விஜயன் ஆகியோரும் ரத்தம் குடித்தனர்.
இதுகுறித்து அருளாந்து கூறியதாவது:
பத்திரகாளி அம்மன் உருவ வெள்ளி சாமி சிலைதான் எங்களின் குடும்பச் சொத்து. 24 தலைமுறையாக ஆண்டுதோறும் ஆடி மாத பூஜை வழிபாடு நடத்துகிறோம். அப்போது குடும்ப நன்மைக்காகவும், உடல் ஆரோக்கியத்துக்காகவும் எருமை மாடுகளை பலிகொடுத்து ரத்தம் குடிப்போம்.
சாமி பக்தி உள்ளதால் ரத்தம் செரிமாணம் ஆகிவிடும். இதன் கறியை பத்ரகாளியம்மன் சாமி கும்பிடுபவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். திருவிழாவின் மறுநாள் மது எடுப்பு நடக்கும். இதில் மாட்டின் தலை, கொம்பை ஊர்வலமாக எடுத்து சென்று ஒரு புதரில் வைத்து சாமி கும்பிட்டு திருவிழாவை நிறைவு செய்வோம் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications