மர்ம மனிதனை துரத்திய மக்கள் - நள்ளிரவில் சென்னையில் பரபரப்பு!
சென்னை: சைக்கோ மனிதன் என சந்தேகப்படும் ஒரு மர்ம நபரை நள்ளிரவில் சென்னை கே.கே.நகர் பகுதி மக்கள் துரத்தியதால் விடிய விடிய அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
சென்னை வடபழனி, கே.கே.நகர், அசோக்நகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்ஒரு கொலையில் மட்டும்தான் துப்பு துலங்கியுள்ளது. மற்ற ஐந்து கொலைகளுக்கும் யார் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை.
கொலையானவர்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டுக் காவலாளிகள் என்பதால் குறி வைத்து கொல்வது சைக்கோ மனிதனாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் கே.கே. நகர் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பு உடையுடன், முகத்தில் ரத்தக் காயத்துடன் ஒரு மர்ம நபரைப் பார்த்த அப்பகுதியினர், அவர் சைக்கோ மனிதனாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் கம்பு, கட்டைகளுடன் திரண்டனர். அந்த மர்ம நரபரை துரத்தினர். அவர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடினார். மேலும், வித்தியாசமான முறையில், கூட்டத்தைப் பார்த்து மிரட்டலாக உருமியதால் மக்கள் பீதியடைந்து இவர் நிச்சயம் சைக்கோதான் என்ற முடிவுக்கு வந்து துணிச்சலுடன் அவரைத்துரத்தினர்.
ஆனால் அந்த நபர் மக்களிடம் பிடிபடாமல் ஒவ்வொரு கட்டடமாக தாண்டி குதித்து ஓடியுள்ளார். ஆனாலும் விடாமல் பொதுமக்கள் அவரைத் துரத்தினர்.
இதனால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்பாகி விட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கம்பு, கட்டைகளுடன் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அரிந்ததும் கே.கே.நகர் போலீஸார் விரைந்து வந்து அந்த மர்ம நபரைப் பிடித்து ஜீப்பில் ஏற்றினர்.
இதையடுத்து ஜீப்பை சூழ்ந்த மக்கள், அந்த நபரை அடிக்க முயன்றனர். அவர்களிடமிருந்து அந்த நபரைக் காக்க பெரும்பாடு பட்ட போலீஸார், ஒரு வழியாக பொதுமக்களை விரட்டி விட்டு ஜீப்புடன் கிளம்பினர்.
இந்த களேபரத்தில் அந்த சாலை வழியாக வந்த சில வாகனங்கள் மீதும் மக்கள் தாக்குதல் நடத்தினர்.
மர்ம நபர் சிக்கியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அந்தப் பகுதியே விடிய விடிய களேபரமாக இருந்தது. பிடிபட்ட நபர் யார் என்பது குறித்து போலீஸார் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அவரிடம் விசாரணை நடத்திய பிறகே உண்மை தெரிய வரும் எனத் தெரிகிறது.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications