எம்பிக்களிடம் பேரம் நடத்தவில்லை: ப.சிதம்பரம் மறுப்பு
டெல்லி: மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்பிக்களிடம் பேரம் பேசப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறுவது ஆதாரமற்ற புகார். இது கண்டிக்கத்தக்கது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களவையில் வரும் 22 ம் தேதி நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெறும் என்ற திடமான நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசின் வெற்றியும் தோல்வியும் தொழிலதிபர்களின் கையில் இருக்கிறது என்று கூறுவது ஆதாரமற்றது.
தொழிலதிபர்களின் தலையீடு இதில் இல்லை என்பதே உண்மை. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
ஆட்சியை காப்பாற்ற ரூ.25 கோடி கொடுத்து எம்பிக்களை வாங்குவதாகவும், அதற்காக தொழில் நிறுவனங்களின் உதவியை பெறுவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி.பரதன் கூறும் புகார் கண்டிக்கத்தக்கது.
அரசியலில் நிதானம், பொறுமை என்பதே இல்லாமல் போய்விட்டது. புகாரை மிகைப்படுத்தி கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications