பண பலத்தைக் காட்டும் பகுஜன் - முலாயம் சிங் பாய்ச்சல்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நாள் நெருங்கி விட்ட நிலையில் சமாஜ்வாடி கட்சி கலகலக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அக்கட்சித் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை முலாயம் சிங் யாதவ் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது நடந்து வரும் நிகழ்வுகள், இடதுசாரிகள், சநதிரபாபு நாயுடு உள்ளிட்டோரின் சுய நலத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டு விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை. பணத்தை விரும்பிய சிலர்தான் கட்சிக்கு துரோகம் இழைத்து வெளியேறியுள்ளனர்.
எனது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி பண பலத்தை காட்ட ஆரம்பித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்தது தவறு என்பதை இடதுசாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களிடமிருந்து விலகி வர வேண்டும் என்றார் முலாயம் சிங்.












Click it and Unblock the Notifications