சேது பதில் மனு: புண்ணாக போகிறது மத்திய அரசு-பாஜக
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் மீதான தடையை நீக்கக் கோரி பதில் மனு தாக்கல் செய்வதன் மூலம் மத்திய அரசு மோசமான விளைவுகளை சந்திக்க உள்ளது என்று பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார்.
சேது சமுத்திர திட்டத்துக்கான தடையை நீக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனு தாக்கல் செய்யவுள்ளது.
இதுகுறித்து வெங்கையா நாயுடு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில்,
உச்சநீதிமன்றத்தில் உள்ள பிரச்னைக்குரிய சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு மீண்டும் கையில் எடுத்திருப்பது அவர்களுக்கே காயத்தை ஏற்படுத்தப் போகிறது. இதை பாஜ சீரியஸாக எச்சரிக்கிறது.
தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள கூட்டணியில் உள்ள திமுகவின் வற்புறுத்தலுக்கு ஐக்கிய முற்போக்கு அரசு பலியாகியிருப்பது தெரிகிறது.
மத்திய அரசின் கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கிறது திமுக. தற்போதுள்ள இக்கட்டான சூழலில் திமுகவை திருப்திபடுத்த மத்திய அரசு சேது திட்டத்தின் மீதான தடையை நீக்கக் கோரி பதில் மனு தாக்கல் செய்கிறது.
சேது திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது என்பது இந்த அரசுக்கு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். சேது திட்டம் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டால் பாஜக அரசியல் ரீதியாக எதிர்த்து போராடும் என்று எச்சரிக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications