காவல் நிலையத்தில் விஷம் குடித்து ஏட்டு தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் நிலையத்திற்குள் விஷம் அருந்தி ஏட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே உள்ள குறுவன் தட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன். இவர் குலசேகரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.

சசிதரனுக்கும், உயரதிகாரி ஒருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த அதிகாரி சசிதரனை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரோந்து பணி்யில் ஈடுபட்டிருந்த சசிதரனுக்கும் அந்த அதிகாரிக்கும் இடையே மீண்டும் மோதல் எழுந்துள்ளது. ரோந்து பணி முடிந்து காவல் நிலையம் திரும்பிய சசிதரன் ஓய்வு அறைக்கு சென்று பிராந்தியில் விஷம் கலந்து குடித்தார்.

சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த சக போலீசார் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சசிதரன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தக்கலை டிஎஸ்பி ராஜா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+