அணி மாறி ஓட்டு- 8 பாஜக எம்பிக்கள் நீக்கம்
டெல்லி: மக்களவையில் நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 8 எம்பி்க்களை பாஜக கட்சியை விட்டு நீக்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரிஜ்பூஷன் சரண் சிங், குஜராத்தைச் சேர்ந்த சோம்பாய் படேல், பாபு பாய் கதாரா, கர்நாடகத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் கன்னூர், சங்கிலியானா, மனோரமா மாதவராஜ்,
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரபான் சிங், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஹரிபாஹூ ரத்தோட் ஆகிய 8 பேரும் கடசி மாறி வாக்களித்தது, வாக்களிப்பை புறக்கணித்தது ஆகிய காரணங்களால் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அக் கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
அதே போல காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்த 2 தெலுங்கு தேசம், 2 ஐக்கிய ஜனதாளம், 1 பிஜூ ஜனதாதளம், 1 மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய எம்பிக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன.
அதே போல கட்சி மாறி வாக்களித்த சிரோமணி அகாலிதளம் எம்பிக்கும் அந்தக் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்து.