கொறடா உத்தரவு-சோம்நாத் மீறியது ஏன்?: பாஜக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒவ்வொரு எம்.பியும் அக்கட்சியின் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். சோம்நாத் சாட்டர்ஜிக்கும் அது பொருந்தும். நான் சோம்நாத் இடத்தில் இருந்து, கட்சி என்னை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தால் உடனடியாக விலகியிருப்பேன் என்று கூறியுள்ளார் லோக்சபா பாஜக துணைத் தலைவர் வி.கே.மல்ஹோத்ரா.

சோம்நாத் சாட்டர்ஜி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், சோம்நாத் சாட்டர்ஜிக்கு கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தாரா என்பது குறித்து எனக்கு தெரியாது.

இருப்பினும் கொறடா உத்தரவி பிறப்பிக்கப்பட்டிருந்தால், அதை எம்.பிக்கள் ஏற்றுக்கொண்டுதான்ஆக வேண்டும். மீறி நடந்தால் நடவடிக்கையையும் சந்தித்தாக வேண்டும். இதுதான் நடைமுறை.

நான் சோம்நாத் சாட்டர்ஜி இடத்தில் இருந்திருந்தால், என்னை ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சி உத்தரவிட்டிருந்தால், உடனடியாக ராஜினாமா செய்திருப்பேன்.

இப்போதும் கூட துணை சபாநாயகர் சரஞ்சித் சிங் அத்வால், தேசிய ஜனநாயக கூட்டணி விரும்பினால், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதாகவும், இதற்காக துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அத்வால் தனது பதவியில் தொடரட்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி அனுமதி
அளித்தது என்றார் மல்ஹோத்ரா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+