பொள்ளாச்சி: சத்துணவு உண்ட 37 மாணவர்கள் மயக்கம்

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சத்துணவு சாப்பி்ட்ட 37 மாணவர்கள் திடீரென்று மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று மதியம் சத்துணவுடன் முட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

அதை சாப்பிட்ட 37 மாணவ மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் உடனே பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மேலும் 25 மாணவ, மாணவிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொள்ளாச்சி சப் கலெக்டர் (பொறுப்பு) முத்துசாமி, அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+