அத்வானி பொம்மைக்கு குளுக்கோஸ்-காங். போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காங்கிரஸ் கூட்டணி அரசு ஐசியூவில் இருப்பதாக கூறிய பாஜக தலைவர் அத்வானியைக் கண்டித்து, திருச்சியில் அவரது உருவ பொம்மையை கட்டிலில் படுக்க வைத்து குளுக்கோஸ் செலுத்தும் நூதனப் போராட்டத்தை காங்கிரஸார் நடத்தினர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.சி.பாபு தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது.
அத்வானியின் உருவ பொம்மையை கட்டில் ஒன்றில் படுக்க வைத்து அதற்கு குளுக்கோஸ் செலுத்துவது போல சித்தரித்து அத்வானிக்கு எதிராக
கோஷமிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்தனர்.ஆனால் போலீஸாரைப் பார்த்ததும் அத்வானியின் உருவ பொம்மையுடன் காங்கிரஸார் ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அத்வானியின் உருவ பொம்மையை போலீஸாரால் மீட்க முடியாமல் போய் விட்டது.












Click it and Unblock the Notifications