தமிழகமே இருளில் மூழ்கியுள்ளது- ராமதாஸ்
கடலூர்: அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து 28 முதல் 30ம் தேதி வரை மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தைலாபுரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது,
மின்வெட்டு காரணமாக தமிழகமே இருளில் மூழ்கியுள்ளது. அரசு அறிவித்துள்ள மின்வெட்டினால் விவசாயிகள், மாணவர்கள், நெசவாளர்கள், சிறு தொழில் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து 28 முதல் 30ம் தேதி வரை மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும்
தற்போதைய மின் பற்றாகுறைக்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என்ற திமுக குற்றச்சாட்டை ஏற்க முடியாது. 2004ல் இருந்தே மின் உற்பத்தி 8,690 மெகாவாட்டாகத்தான் உள்ளது. 2004ல் இருந்து மின்தேவை 5,909 மெகாவாட் ஆனது. தற்போது 2008ல் 9,124 மெகாவாட் மின் தேவையாக அதிகரித்துள்ளது.
மின் தேவையை உணர்ந்து மின் உற்பத்தி திட்டங்களை திமுக அரசு மேற்கொள்ளவில்லை. அரசு இதில் தோற்றுபோய்விட்டது. டாஸ்மாக் விற்பனை இலக்கை நிர்ணயம் செய்து லாபம் ஈட்டும்போது, இலக்கு வைத்து மின் உற்பத்தியை அரசால் உயர்த்த முடியாதா
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் சென்னை தரமணியில் பல ஏக்கர் நிலத்தை டாடா குழுமத்துக்கும், டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் அரசு வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் வீடுகட்டி வாழ நிலம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
மணல் திருட்டு, கல்வி வியாபாரம், சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவது போன்ற பொதுமக்கள் பிரச்னைக்காக குரல் எழுப்பிய காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், தாஸ் ஆகியோரும் தேசிய பாதுகாப்பு. சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அரசியல் பழிவாங்குதலையே காட்டுகிறது என்றார்.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது லோக்சபாவில் நடந்த குழப்பங்கள் குறித்து அவர் கூறுகையில், அங்கு விவாதமே நடக்கவில்லை என்பதை காட்டுகிறது. அங்கு ஜனநாயக கொள்கையுடன் எதுவும் நடக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இளைஞர்களை அரசியலே வேண்டாம் என்று ஒதுங்க வைத்துவிடும் என்றார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
தமிழ்நாடு அரசியலே தலைகீழாகப் போகுது.. அய்யாவை சந்தித்த சின்னம்மா! தைலாபுரத்தில் பரபரத்த மீட்டிங்! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications