For Daily Alerts
Just In
தாஜ்மஹாலில் பூஜை-சிவ சேனாவினர் கைது
ஆக்ரா: தாஜ்மாகாலுக்குள் சென்று பூஜை செய்ய முற்பட்ட மூன்று பெண்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
பார்வையாளர்களைப் போல வந்த சேனா தொண்டர்கள், சிவ பூஜைக்கான மந்திரங்களை முழங்கியபடி, கும்பிட்டுக் கொண்டே தாஜ்மகாலைச் சுற்றி வரத் தொடங்கினர். இதனால் வெளிநாட்டுப் பயணிகள் சற்றே மிரட்சியோடு ஒதுங்கி நின்றனர்.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து சேனா தொண்டர்களை அப்புறப்படுத்தினர். தாஜ்மகாலின் வெளிப்புறத்தில் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
சிவன் கோவிலாக இருந்த இடம்தான் இப்போது தாஜ்மகாலாக உள்ளது எனக் கூறி போலீசிடம் தங்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
Story first published: Friday, July 25, 2008, 10:38 [IST]