சேது: திமுகவிடம் அரசு சரண்-பாஜக புகார்
டெல்லி: சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில், பதவியில் நீடிப்பதற்காக திமுகவிடம் மன்மோகன் சிங் அரசு சரணடைந்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ராமர் கட்டிய பாலத்தை அவரே இடித்து விட்டார் என சேது சமுத்திரத் திட்ட வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு ஆரம்பத்திலிருந்தே முரண்பாடாக பேசி வருகிறது. முதலில் ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கினார் என்று கேட்டது திமுக.
பின்னர் ராமர் பாலம் இயற்கையாக உருவானது, மனிதர்கள் யாரும் அதை கட்டவில்லை என்றனர். இப்போது சூப்பர்மேன் ஒருவரால் அந்தப் பாலம் கட்டப்பட்டதாக அரசு கூறுகிறது. இதன் மூலம் ராமரையும், அவரது பக்தர்களையும் மத்திய அரசு அவமதித்துள்ளது.
கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதை ஆரம்பத்திலிருந்தே மன்மோகன் சிங் அரசு செய்துவருகிறது. பிரதமர் பதவியில் நீடிக்கவும், அரசைக் காக்கவும் திமுகவிடம் சரணடைந்துள்ளது மத்திய அரசு.
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல கட்சிகளுடன் போட்டுக் கொண்ட ரகசிய ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று.
ஆனால் கெட்டதிலும் நல்லது என்பதைப் போல ராமர் இல்லை, ராமர் பாலம் இல்லை என்று அரசு கூறி வந்த நிலையில் ராமர் இருந்திருக்கிறார், ராமர் பாலத்தை அவர்தான் கட்டினார் என்பதை தனது பதில் மூலம் மத்திய அரசு இப்போதாவது ஒப்புக் கொண்டிருக்கிறது என்றார் ரூடி.
வி.எச்.பி. கண்டனம்
இதற்கிடையே, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் வேதாந்தம் சென்னையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ராமர் தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள பதில் கண்டனத்துக்குரியது.
புகழ் பெற்ற சட்ட மேதைகளில் ஒருவரான பாலி நாரிமன் போன்றோர், அரசுக்காகவும், அரசியல் கட்சிகளுக்காகவும் உச்சநீதிமன்றத்தில் தவறான வாதங்களை எடுத்து வைப்பதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
நாரிமனுக்கு வால்மீகி ராமாயணம் நன்கு தெரியும். அதுதான் அங்கீகரிக்கப்பட்ட ராமாயாணமாகும். ராமரைப் பற்றியும், அவரது அற்புத செயல்கள் குறித்தும் அதில்தான் உண்மையான தகவல்கள் உள்ளன.
வால்மீகி ராமாயணத்தில் தான் கட்டிய பாலத்தை ராமர் இடித்ததாக எங்குமே கூறப்படவில்லை. இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய பின்னர் தான் கட்டிய பாலத்தை ராமர், சீதைக்குக் காட்டினார். அவ்வளவுதான் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர் பாலத்ைத ராமர் இடித்ததாக அதில் கூறப்படவில்லை என்று கூறியுள்ளார் வேதாந்தம்.
-
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!












Click it and Unblock the Notifications