கதவை பூட்டாமல் பறந்த விமானம்-அவசரமாக தரையிறங்கியது

Subscribe to Oneindia Tamil

Jet Airways
டெல்லி: டெல்லியிலிருந்து மும்பைக்கு பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கதவுகள் சரியாத பூட்டப்படாததால் அந்த விமானம் அவசரமாக மீண்டும் டெல்லியில் தரையிறங்கியது.

இதையடுத்து அந்த விமானத்தின் இரு சிப்பந்திகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மத்திய அமைச்சர் சரத்பவாரும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியிலிருந்து நேற்று மாலை இந்த விமானம் மும்பை கிளம்பியது. போயிங்-737 ரக விமானமான இந்த விமானம் 5,000 மீட்டர் உயரத்தை அடைந்த நிலையில், விமான சிப்பந்திகள் கதவு சரியாக பூட்டப்படாமல் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.

அந்தக் கதவு வழியாக விமானத்திலிருந்து அழுத்தப்பட்ட காற்று வெளியேறியது மட்டுமல்லாமல், வெளியிலிருந்தும் காற்று புகுந்தது பெரும் சத்தம் கிளம்பியது. மேலும் அந்த கதவு வழியாக வெளிப் பகுதியையும் பார்க்க முடிந்தது.

இதையடுத்து உடனடியாக விமானிக்கு அவர்கள் தகவல் தந்தனர்.

இதைத் தொடர்ந்து விமானத்தை உடனடியாக டெல்லிக்குத் திருப்பினர் விமானிகள். மேலும் 8,000 அடி உயரத்துக்கு விமானத்தை கொண்டு சென்ற விமானிகள் விமான எரிபொருளை வெளியேற்றினர்.

பின்னர் டெல்லியில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்கியது.

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், விமானத்தின் கதவுகளை இரு சிப்பந்திகள் சரியாக பூட்டாதது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குக் காரணம், சரத் பவாரின் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் தான் விமானத்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+