தர்மபுரி: கோவில் கட்டினால் பெரியார் சிலை-தி.க
தர்மபுரி: தருமபுரியில் உள்ள அரசு தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத்துறை வளாகத்திற்குள் கோயில் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அங்கு பெரியார் சிலையை வைப்போம் என்று மாவட்ட கலெக்டருக்கு தி.க.வினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து திராவிட கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
தருமபுரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலக வளாகத்திற்குள் சுமார் அரை ஏக்கர் நிலத்தில் ஏற்கனவே 13 கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது 14ஆவது கோயிலை அதிகாரிகளின் துணையோடு சிலர் கட்டி வருகின்றனர்.
மதச் சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் இந்து மதத்திற்கு என பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை வீணடித்து அதிகாரிகள் துணையோடு கோயிலை சிலர் கட்டி வருவது கண்டனத்திற்குரியதாகும்.
இது போன்ற அரசு இடங்களில் கோயில்கள் கட்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
விதியை மீறி தீயணைப்புத் துறை அலுவலகத்திற்குள் கட்டப்பட்டிருக்கும் கோயில்களை அகற்றுவதோடு, கட்டிவரும் வரும் கோயில் கட்டுமானப் பணிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
இதற்குத் துணை போகும் தீயணைப்புத் துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தீயணைப்புத்துறை வளாகத்திற்குள் தந்தை பெரியார் சிலையை வைப்போம் என தி.கவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பிரச்சனை குறித்து தீயணைப்புத்துறை அலுவலர் உரிய விளக்கம் அளிக்க மாவட்ட கலெக்டர் ஆணை பிறப்பித்துள்ளார்.
-
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications