பிரதமர், சோனியா அகமதாபாத் வருகை
டெல்லி:குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்த அகமதாபாத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செல்கின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவமனைகள் உள்பட 16 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 49 பேர் பரிதாபமாக பலியாயினர். 162 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாஜக தலைவர் அத்வானி நேற்று அகமதாபாத் சென்றார். சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டார். குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இன்று அகமதாபாத் செல்கின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளை பார்வையிடுகின்றனர்.
குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சென்று பார்வையிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications