திருச்சி மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு

திருச்சி மாவட்டத்தின் திருவெறும்பூர், லால்குடி, முசிறி, மணப்பாறை மற்றும் ஜீயபுரம் ஆகிய பகுதிகளில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாக திருச்சி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டள்ளனர்.
இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழுக்களுக்கு அவசர நிலைக்கேற்ப செயல்படுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 80 இடங்களில் போலீசார் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் உள்ள 12 செக்போஸ்ட்டுகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
வழிபாட்டு தலங்கள், மார்கெட், பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகிய முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரோந்தும் சுற்றி வருகின்றனர்.
விழுப்புரம் முதல் கன்னியாக்குமரி வரையிலான ரயில் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினரும் ரயில்வே போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மற்றும் திருச்சியை சுற்றியுள்ள ரயில் நிலையங்களில் பயணிகளை தீவிர சோதனைக்கு பின்னே அனுமதிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications