அல்-உம்மா மிரட்டல்-கோவை சிறை அதிகாரிக்கு பாதுகாப்பு
கோவை: அல் உம்மா தீவிரவாத அமைப்பின் மிரட்டல் கடிதத்தை அடுத்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகிப்பவர் கோவிந்தராஜ். கடந்த சில தினங்களுக்கு முன் அல்-உம்மா தீவிரவாத அமைப்பு பெயரில் கோவிந்தராஜூக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது.
அந்த கொலை மிரட்டல் கடிதத்தை கோவை மாநகர போலீஸ் ஆணையர் மஹாலியிடம் கோவிந்தராஜ் ஒப்படைத்தார். இந்நிலையில் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாத அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சிறை அதிகாரி கோவிந்தராஜூக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், வீட்டுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications