சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உச்சகட்ட பாதுகாப்பு
சிதம்பரம்: குண்டு வெடிப்புகளை தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கோயிலின் மூன்று வாயில்கள் அடைக்கப்பட்டது.
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைத் தொடர்ந்து அனைத்து பிரபலமான கோயில்களுக்கும் பாதுகாப்பு அதிகபடுத்தப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கீழவாசலை தவிர்த்து மேல வாசல், தெற்கு வாசல் மற்றும் வடக்கு வாசல்கள் மூடப்பட்டுள்ளன.
பக்தர்களை மெட்டல் டிடெக்கர் சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலைச் சுற்றி பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications