கால்நடை மருத்துவம்-நாளை கவுன்சிலிங் தொடக்கம்
சென்னை: கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங் சென்னையில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் கால்நடை மருத்துவம், மீன்வளம், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. நாளை மறு நாள் ஆகஸ்டு 1ம் தேதி முடிகிறது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதங்கள் ஏற்கனவே பல்கலைக்கழகத்தால் அனுப்பப்பட்டுள்ளன.
கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் (கட் ஆப்) பெற்ற தகுதியுடைய மாணவ-மாணவிகள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
விவரங்களுக்கு:
தலைவர், தேர்வுக்குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-51
என்ற முகவரியில் நேரிலோ, தொலைபேசி எண்: 044-25551586 மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.