சென்னை: பெண் விஏஓ படுகொலை-கணவர் சரண்
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலரை (விஏஓ) அவரது கணவரே வெட்டிக் கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்தார்.
மடிப்பாக்கம் சரோஜினி நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (36) தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (வயது 34), திருக்கழுகுன்றம் அருகே கிராமம் ஒன்றில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு விக்னேஷ் (11), ஐஸ்வர்யா (7) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
மனைவியின் நடத்தையில் பிரகாசுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தாகக் கூறப்படபகிறது.
இந் நிலையில் இன்று காலை குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மஞ்சுளாவை கத்தியால் குத்தினார் பிரகாஷ்.
இதில் மஞ்சுளா இறந்தார். இதையடுத்து கத்தியுடன் பிரகாஷ் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.












Click it and Unblock the Notifications