பிரதமர் வேட்பாளர் மாயாவதி இல்லை- காரத்
டெல்லி: இடதுசாரிக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக மாயாவதி இருக்கமாட்டார் என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
அணு ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் கழண்டு கொண்டன. ஆதரவை வாபஸ் பெற்றதால் மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டியிருந்தது.
அந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியுடன் இடதுசாரிகள் கை கோர்த்தன. புதிய மாற்று சக்தியாக 3வது அணி உருவாகியுள்ளது என்று கூறினர்.
ஆட்சி கவிழ்ந்தால் தேர்தலை சந்திக்கும் வகையில், மாயாவதியை பிரதமராக்க புதிதாக உருவான 3வது அணியினர் முடிவு செய்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதால் அந்த கோஷங்கள் அடங்கின.
இந்நிலையில் இந்த கூட்டணி 3வது அணியாக முடியாது என்றரீதியில் பேசியுள்ளார் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்.
அவர் கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியுடன் இடதுசாரிகள் கை கோர்த்திருப்பது 3வது அணியாகாது. குறைந்தபட்ச பொது திட்டத்தை சார்ந்தே 3வது அணி இருக்கும். வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு அணியுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications