கன்னியாகுமரியில் கடல் சீற்றம்-முக்கடல் சங்கமத்தில் குளித்த தடை
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் கடலலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கடலரிப்பு தடுப்பு சுவர், தூண்டில் வளைவு பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் நேற்று மாலை முதல் கடல் அலையின் வேகம் மிகவும் சீற்றமுடன் காணப்பட்டது.
முக்கடல் சங்கம பகுதிகளில் சுமார் 15 அடிக்கு மேல் கடல் அலைகள் எழும்பியது. இதனால் முக்கடல் சங்கமத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர்.












Click it and Unblock the Notifications