இளம் பெண்ணை கற்பழித்தவருக்கு 10 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி அருகே இளம் பெண்ணை கற்பழித்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூரைச் சேர்ந்தவர் மணிமாறன் (40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

இவர், குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார்.

இதனால் கர்ப்பமான அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிமாறனிடம் கேட்டார். அதற்கு மணிமாறன் மறுத்து விட்டார்.

இதுகுறித்து, காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மணிமாறன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி பெருமாள் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், மணிமாறனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+