கருணாநிதி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - நாளை விசாரணை
டெல்லி: கடந்த அக்டோபர் 1ம் தேதி சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நடத்த வலியுறுத்தி திமுக அரசு பந்த் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி திமுக அரசு பந்த் நடத்த அழைப்பு விடுத்தது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து பந்த் அழைப்பு உண்ணாவிரதமாக மாற்றப்பட்டது. இருப்பினும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்களும் சரிவர ஓடவில்லை.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி, கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதிஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இந்த மனு நாளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications