சென்னையில் பிபிஓ ஊழியை கற்பழிப்பு - சக ஊழியர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருங்குடியில், பிபிஓவில் பணியாற்றி வரும் பெண் சக ஊழியரால் கற்பழிக்கப்பட்டார். அந்த ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கிள்ளியூரைச் சேர்ந்தவர் ஜூலுலால் நாயர். இவர் பெருங்குடியில் உள்ள பிபிஓ அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இதே அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் ஷீலா. இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர்.

இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். சனிக்கிழமையன்று பிற்பகல் ஷோபாவை வெளியில் போய் லஞ்ச் சாப்பிடலாம், லீவு போட்டு விட்டு வா என நாயர் அழைத்துள்ளார். ஆனால் லீவு போட முடியாதே என ஷோபா கூறியுள்ளார். ஏதாவது காரணத்தைக் கூறி லீவு போடுமாறு வற்புறுத்தியுள்ளார் நாயர்.

இதையடுத்து உடல் நலம் சரியில்லை என்று கூறி விடுப்பு எடுத்து விட்டு ஷோபா, நாயருடன் சென்றார்.

பின்னர் ஷோபாவை தான் தங்கியிருந்த இடத்திற்குக் கூட்டிச் சென்றார் நாயர். அங்கு இருவரும் சாப்பிட்டுள்ளனர். பின்னர் வெளியில் சென்ற நாயர் பீர் வாங்கி வந்துள்ளார்.

அதை ஷோபாவுக்கும் கொடுத்துள்ளார். அவரும் குடித்துள்ளார். பீர் உள்ளே போனதால் ஷோபாவுக்கு போதை ஏறியுள்ளது. பின்னர் அதைப் பயன்படுத்தி ஷோபாவை நாயர் கற்பழித்து விட்டதாக தெரிகிறது.

நேற்று காலை விழித்தெழுந்த ஷோபா தான் கற்பழிக்கப்பட்டதை அறிந்து நாயருடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் துரைப்பாக்கம் காவல் நிலையம் சென்று அங்கு நாயர் தன்னை மது போதையில் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று நாயரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+