ஜெபம் செய்வதாக கூறி ரூ.1.5 லட்சம் மோசடி
பாவூர்சத்திரம்: ஜெபம் செய்து மன வளர்ச்சிக் குன்றிய சிறுவனை குணப்படுத்துவதாக கூறி ரூ.1.5 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி வீட்டு வசதி வாரிய காலனியில் வசிப்பவர் செல்லத்துரை, ஆசிரியர். இவரது மகன் ராஜசேகரன், மனவளர்ச்சி குன்றியவர்.
பாவூர்சத்திரம் செல்வவிநாயகபுரத்தை சேர்ந்த ஆசிரியர் தம்பதி மாணிக்கம்- தீபாராணி மேகலா. ஜெபம் செய்தால் மனவளர்ச்சி குன்றிய உங்கள் மகன் ராஜசேகரனை குணப்படுத்தி விடலாம், அதற்கு அதிக செலவாகும் என்று செல்லத்துரையிடம் மாணிக்கமும் தீபராணியும் கூறினர்.
இதை நம்பிய செல்லதுரை கடந்த 2003ம் ஆண்டு ரூ.1.5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாக ஜெபம் செய்தும் ராஜசேகரனுக்கு குணமாகவில்லை.
இதையடுத்து செல்லதுரை தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் ஆசிரிய தம்பதியினர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து செல்லதுரை பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதில் கடந்த 13ம் தேதியும் மாணிக்கம் வீட்டுக்கு சென்று பணம் கேட்டபோது, என்னை அவதூறாக பேசியும், கொலை செய்து விடுவோம் என்று மாணிக்கமும், தீபராணியும் மிரட்டினர் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பண மோசடி செய்த ஆசிரியர் தம்பதிகளை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications