தேடப்படும் 11 தீவிரவாதிகள்-துப்பு கொடுத்தால் பரிசு: போலீஸ்
{image-Absconded Terrorists250_05082008.jpg tamil.oneindia.com}சென்னை: தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று நாச வேலையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய 11 தீவிரவாதிகளின் புகைப்படங்களை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. இவர்கள் குறித்த தகவல் தருவோருக்கு பரிசு அளிக்கப்படும் எனவும் அது தெரிவித்துள்ளது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலிஅப்துல்லா என்ற தீவிரவாதியின் தலைமையிலான ஒரு கூட்டம், தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று பெரும் நாச வேலைகளில் ஈடுபட சதித் திட்டம்தீட்டியிருந்தது. போலீஸாரின் துல்லியமான நடவடிக்கையால் இந்த சதித் திட்டம் முளையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அலி அப்துல்லா, அப்துல் கபூர், ஹீரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அப்துல்லாவிடம் நடத்திய விசாரணையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜா ஹூசேன் என்கிற இன்னொரு கைதிக்கும் இந்த சதித் திட்டத்தில் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த சதித் திட்டத்தில் 11 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அனைவரும் தலைமறைவாகஇருப்பதாகவும், அவர்கள் குறித்து துப்பு கொடுப்போருக்கு பரிசளிக்கப்படும் எனவும்காவல்துறை அறிவித்துள்ளது. 11 பேரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இவர்கள் தொடர்பான தகவல்தெரிந்தோர் அதுகுறித்து தொலைபேசி மூலமும் தெரிவிக்கலாம்.
தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்- 044 - 28555069, 28555045, 28555036
தேடப்படும் தீவிரவாதிகள் விவரம்:
- நாகூர் அபுபக்கர் சித்திக்
- வாணியம்பாடி முஷ்டாக் அகமது
- கோவை டெய்லர் ராஜா என்கிற ராஜா என்கிற சாதிக்
- கோழிக்கோடு நூஹூ என்கிற ரஷீத்
- கோவை முஜிபுர் ரஹ்மான்
- மேலப்பாளையம் முகம்மது அலி என்கிற யூனிஸ் என்கிற மன்சூர்
- மலப்புரம் கினி என்கிற குஞ்சு முகம்மது
- கோவை அயூப் என்கிற அஷ்ரப் அலி
- ஹைதராபாத் அபு உமர்
- அதிராம்பட்டினம் தெளபீக்
- சவூதி அரேபியாவைச் சேர்ந்த அபு ஹம்சா












Click it and Unblock the Notifications