10 வயது சிறுமி கற்பழித்து கொலை-வாலிபருக்கு தூக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை: பத்து வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த காமகொடூரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

மதுரை மேல அனுப்பாண்டி ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் செல்வம் (22). தான் ஒரு அனாதை என்று கூறி நடராஜன் என்ற பூ வியாபாரி வீட்டில் தங்கி பூ கட்டும் வேலைக்கு சேர்ந்தார்.

நடராஜனின் மகன் யோகநாதனை (9) கடந்த 17.9.2006ம் ஆண்டு ஹோமோ செக்சில் ஈடுபடுத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.

பின்னர் ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்த பூ வியாபாரி மாணிக்கவாசகத்திடம் வேலைக்கு சேர்ந்தான். அவரது மகள் நாகசாந்தியை (10) கடந்த 22.10.2006ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தார்.

சிறுமியின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி அட்டைப் பெட்டியில் போட்டு மறைத்து வைத்தார். ஆனால் அன்றைய தினமே போலீசில் செல்வம் சரணடைந்தார்.

யோகநாதன் கொலை வழக்கு மதுரை இரண்டாவது நீதிமன்றத்திலும், நாகசாந்தி கொலை வழக்கு மகளிர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. சிறுமி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எப்சிபாய், இரண்டு குழந்தைகளை கொடூரமான முறையில் கொலை செய்த செல்வத்துக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து நீதிபதி சித்தார்த்தர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: செல்வம் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. செல்வத்திற்கு சாகும் வரை தூக்கும் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதிக்கிறேன் என்று கூறினார்.

தான் செய்த தவறுக்கு இறைவன் சரியான தீர்ப்பு கொடுத்துவிட்டதாக மரண தண்டனை பெற்ற செல்வம் கூறினார்.

மதுரை மகளிர் நீதிமன்றம் கடந்த 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதன் முதலாக இந்த வழக்கில்தான் தூக்கு தண்டனையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+