அமர்நாத் கோவில் வாரிய உறுப்பினர்கள் கூண்டோடு விலகல்
ஸ்ரீநகர்: அமர்நாத் சங்கர்ஷ் சமிதியின் (அமர்நாத் கோவில் வாரியம்) 10 உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதங்களை கவர்னர் வோராவுக்கு அனுப்பியுள்ளனர்.
அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி மற்றும் ஓய்வறைகள் கட்டுவதற்காக காஷ்மீர் மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவை அரசு வாபஸ் பெற்றது.
இதற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இரு பிரிவினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலைமை மோசமானதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார்.
இந்நிலையில் சமிதியில் உள்ள 10 உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதத்தை கவர்னர் வோராவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சமிதிக்கு புதிய உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளும்படி அதில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சமிதியின் ஒருங்கிணைப்பாளர் லீலா கரண் கூறிகையில், நில விவகாரத்தில் அவர்களாகவே (அரசு) முடிவு செய்து கொள்கின்றனர். எந்த முடிவையும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை. இது மக்களே ஏற்று நடத்தும் போராட்டம். ஜம்மு மக்களை வைத்து பேசாமல் எந்த முடிவை எடுத்தாலும் அது ஏற்கத்தக்கது அல்ல.
கடந்த முறை நிலத்தை பார்வையிட்ட பிரதமரும் பாதுகாப்பு செயலாளரும் மாநில அரசுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட மக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 38 நாட்களாக தொடர்ந்து இங்கு கலவரம் நடந்து வருகிறது. அனைத்து கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்க மத்திய அரசுக்கு இப்போதுதான் தோன்றியிருக்கிறது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications