அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிராக அதிமுக போராட்டம்
நாகை: நாகையில் சப்- கலெக்டரை தாக்கிய வழக்கில் தமிழக அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி அரசு சார்பில் கலர் டிவி வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது விழாவில் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கும், சப்-கெலக்டர் ஜனார்த்தனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது தன்னை ஜாதி பெயரை சொல்லி ஒருமையில் திட்டியதாக அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது சப்- கலெக்டர் ஜனார்த்தன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து தமிழக அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டம் நடத்த அதிமுகவினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து நாகர்கோவிலில் ஜெயலலிதா பேரவை செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications