3 ஆண்டு முன் கைது- 5 மீனவர்களை விடுவித்த இலங்கை
ராமநாதபுரம்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசால் பிடித்துச் செல்லப்பட்ட பாம்பன் மீனவர்கள் 5 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்தவர்கள் ரீகன்ராஜ் (25), ராமகிருஷ்ணன் (21), நிசாந்தன் (19), சுரேஷ் (22), யாகுப் (20). கடந்த 2005 அன்று தடை செய்யப்பட்ட பொருட்களை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அங்குள்ள அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டர். இரண்டரை ஆண்டுகாலம் சிறையில் இருந்து வந்த இந்த 5 மீனவர்களுக்கும் தலா ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தகவலை பாம்பன் நிரபராதி விடுதலை மீனவர் கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications