செம்மொழி: தெலுங்கு-கன்னட கமிட்டிக்கு எதிராக வழக்கு
சென்னை: தெலுங்கு, கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கமிட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்பட்டதையடுத்து கன்னடத்துக்கும் அந்த அந்தஸ்து தரப்பட வேண்டும் என கர்நாடகத்தில் போர்க் குரல் எழுந்துள்ளது. இதையடுத்து ஆந்திராவிலும் தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்து கோரப்பட்டு வருகிறது.
இதையடுத்து இது குறித்து ஆராய இரு கமிட்டிகளை மத்திய அரசு நியமித்தது. அதில் கர்நாடகத்தைச் சேர்ந்த இருவரும், ஆந்திரத்தைச் சேர்ந்த இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் காந்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
இந்த இரு மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களில் மொழியியல் அறிஞர்கள் யாரும் இல்லை. வெறும் மொழிப் பற்று, பிறரது நெருக்குதல், மிரட்டல்கள் ஆகியவற்றுக்கு அடிபணியாமல் இவர்களால் சுயமாக முடிவெடுக்க முடியாது.
இந்த கமிட்டியில் உள்ளவர்களை வைத்துக் கொண்டு, உண்மையிலேயே இந்த இரு மொழிகளும் செம்மொழி அந்தஸ்துக்கு உரியவை தானா, செம்மொழி அந்தஸ்துக்கு உரிய எல்லா தகுதிகளும் அந்த மொழிகளில் உள்ளனவா என்பதை முறையாக ஆராய முடியாது.
தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் செம்மொழி அந்தஸ்து தருவது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டிகளி்ல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சர்வதேச அளவில் உள்ள அங்கீகாரத்தின் அடிப்படையில் தான், அவற்றுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், தெலுங்கு-கன்னடத்துக்காக அமைக்கப்பட்ட கமிட்டிகளில் உள்ளவர்கள் ஆந்திரா, கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். செம்மொழி அந்தஸ்துக்கு பரிந்துரைக்க வேண்டும் என இவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இதனால் செம்மொழி அந்தஸ்து தரலாம் என்பதைத் தவிர வேறு எதையும் இவர்களால் பரிந்துரைக்கவே முடியாது.
உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளை இந்தக் கமிட்டிகளின் தலைவராக நியமித்தால் தான் அவை சுயமாக செயல்பட முடியும்.
எனவே இதில் நீதிமன்றம் தலையிட்டு முறையான அறிஞர்கள் கொண்ட கமிட்டிகளை அமைக்க வேண்டும். இப்போதுள்ள கமிட்டிகளின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசுக்கும் சாகித்ய அகாடமி அமைப்புக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் காந்தி.
இந்த மனு தலைமை நீதிபதி கங்கூலி, நீதிபதி இப்ராகிம் கலீபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், இது தொடர்பாக 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசின் வழக்கறிஞர் துணை சொலிசிட்டர் ஜெனரல் வில்சனுக்கும் உத்தரவிட்டனர்.
-
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு











Click it and Unblock the Notifications