பெரம்பலூரிலும் சாப்ட்வேர் பார்க்-மத்திய அமைச்சர் ராஜா

Subscribe to Oneindia Tamil

Raja-Minister
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைத்துறை அமைச்சர் ஆ.ராஜா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் சார்பில் வளர்ச்சி பணிகள் பற்றிய கண்காணிப்பு குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மேலும், சூரிய மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் பணிக்காக 2,700 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்பட்டு அதற்கான பத்திர பதிவு முடிந்துள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, பருத்தி ஆராய்ச்சி நிலையம், எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை ஆகியவற்றுக்கான பணிகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

ஜெயங்கொண்டம் அனல் மின் திட்த்திற்கு 8,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக மின் துறை அமைச்சர் தலைமையில், நெய்வேலி என்எல்சி அதிகாரிகள் மற்றும் மின் வாரிய அதிகாரிகளுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

நிலம் கொடுத்தோர் குடும்பங்களில் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை மற்றும் குடியிறுப்பு வசதிகள் செய்து தரப்படும். பிஎஸ்என்எல் துறையில் கிராமப்புற தரைவழி தொலைபேசி இணைப்புகளுக்கான உரிமைத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+