பெரம்பலூரிலும் சாப்ட்வேர் பார்க்-மத்திய அமைச்சர் ராஜா

பெரம்பலூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் சார்பில் வளர்ச்சி பணிகள் பற்றிய கண்காணிப்பு குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மேலும், சூரிய மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் பணிக்காக 2,700 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்பட்டு அதற்கான பத்திர பதிவு முடிந்துள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, பருத்தி ஆராய்ச்சி நிலையம், எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை ஆகியவற்றுக்கான பணிகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
ஜெயங்கொண்டம் அனல் மின் திட்த்திற்கு 8,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக மின் துறை அமைச்சர் தலைமையில், நெய்வேலி என்எல்சி அதிகாரிகள் மற்றும் மின் வாரிய அதிகாரிகளுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
நிலம் கொடுத்தோர் குடும்பங்களில் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை மற்றும் குடியிறுப்பு வசதிகள் செய்து தரப்படும். பிஎஸ்என்எல் துறையில் கிராமப்புற தரைவழி தொலைபேசி இணைப்புகளுக்கான உரிமைத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications