கேட்டு கேட்டு சலிச்சு போச்சு.. இளங்கோவன்
ஈரோடு: தமிழக அரசில் பங்கு கேட்டு சலிப்படைந்துவிட்டதாக மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு மாவட்ட தலைவர்கள், வட்டார தலைவர்கள், நகர தலைவர்கள், எம்எல்ஏ, எம்பிக்களை அழைத்து உடனே கூட்டம் நடத்த வேண்டும். அதைச் செய்யாமல் காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசில் காங்கிரஸூக்கு உரிய பங்கு கேட்டு சலித்துப் போய் விட்டோம். இதனால் ஆட்சியில் பங்கு கேட்பதையே விட்டுவிட்டோம்.
தமிழகம் மட்டும் இன்றி பல மாநிலங்களில் மின்தடை உள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி உள்பட பல்வேறு தொழில்கள் கடும் பாதிப்படைந்துள்ளன.
இதற்காகத்தான் நாங்கள் பதவியை கூட பாராமல் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடிவு செய்து செயல்பட்டு வருகிறோம்.
பஞ்சு பற்றாக்குறை மற்றும் நூல் விலைஉயர்வை கட்டுப்படுத்த, இறக்குமதி வரியில் 14 சதவீத வரியை மத்திய அரசு நீக்கிவிட்டது. இந்தியாவில் இருந்து பஞ்சு ஏற்றுமதி செய்ய புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தகம் அனைத்து துறைகளிலும் புகுந்துவிட்டது. அதை உடனே தடை செய்ய வேண்டும் என்பது முடியாதாதல் அதன் சாதக பாதக அம்சங்களை அரசு தீவிரமாக ஆராயந்து வருகின்றது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications