பதவிக்கு ஆபத்து-முஷாரப் சீன பயணம் ரத்து

மேலும் தன்னால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 8 பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் மறுநியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
முஷாரப் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாகவும், முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மறு நியமனம் செய்வது தொடர்பாகவும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் சர்தாரி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இப்போது ஷெரீப்பின் ஆதரவுடன் தான் சர்தாரியின் கட்சி ஆட்சியில் உள்ளது. முஷாரப் மீது நடவடிக்கை எடுப்பதில் சர்தாரி தயக்கம் காட்டி வந்ததால், ஆட்சியைக் கவிழ்ப்பதாக அறிவித்தார் ஷெரீப்.
இதையடுத்து ஷெரீபுடன் பேச்சுவார்த்தையில் இறங்கினார் சர்தாரி. பல சுற்றுகள நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இன்று முஷாரப் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது என இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
நாட்டில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தியது, ஜனநாயக அரசைக் கவிழ்த்தது, பிரதமரை சிறையில் அடைத்தது, ராணுவத்தை தனது கைப்பாவையாக பயன்படுத்தியது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்கியது உள்பட 10 குற்றச்சாட்டுகள் கண்டனத் தீர்மானத்தில் அடங்கும் எனத் தெரிகிறது.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதிபர் பதவியிலிருந்து முஷாரப் இறங்க நேரிடும்.
இந் நிலையில் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க சீனா செல்ல இருந்த முஷாரப் தனது பயணத்தை ரத்து செய்விட்டார்.












Click it and Unblock the Notifications