For Daily Alerts
Just In
புதிய சட்டசபை வளாகம்: கருணாநிதிக்கு ஜெர்மன் குழு விளக்கம்
சென்னை: புதிதாக கட்டப்படவுள்ள சட்டசபை வளாகத்தில் அமையவுள்ள பி பிளாக் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் இன்று ஜெர்மனியின் ஜிஎம்பி இன்டர்நேஷனல் நிறுவனம் படக் காட்சி மூலம் விளக்கியது.
சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டசபை வளாகம் எழிலுற கட்டப்படவுள்ளது. இதற்கான டெண்டரை, ஜெர்மனியைச் ேசர்ந்த ஜிஎம்பி இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த வளாகத்தில் அமையவுள்ள பி பிளாக் குறித்த பட விளக்கத்தை இன்று ஜெர்மனி நிபுணர் குழுவினர் முதல்வர் கருணாநிதிக்கு அளித்தனர்.
பி பிளாக் பகுதியில் 30 அரசுத் துறை அலுவலகங்கள் அமையவுள்ளன. பவர் பாயின்ட் மூலம், இதுதொடர்பாக முதல்வரிடம் ஜெர்மன் குழுவினர் விளக்கினர்.
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி உள்ளிட்டோரும் அப்போது உடனிருந்தனர்.
Comments
Story first published: Friday, August 8, 2008, 14:34 [IST]