கோவில்களை விடுவிக்க துறவிகள் யாத்திரை-விஎச்பி!
புதுக்கோட்டை: இந்து கோவில்களை நிர்வகிக்க தனி வாரியம் அமைக்க வலியுறுத்தி செப்டம்பர் 15ம் தேதி முதல் 15 நாட்களுக்கு துறவிகள் யாத்திரை நடத்த விஎச்பி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் விஸ்வ இந்து பரிஷித் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில அமைப்பாளர் கனகராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:
அமர்நாத் கோவில் விவகாரம் தொடர்பாக இந்துக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் எம்பிக்களிடம் மனு அளிக்கப்பட உள்ளது.
மேலும், இந்த கோவிலுக்கு உடனே நிலத்தை வழங்க கோரி அகில இந்திய அளவில் வரும் 13 ம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.
தமிழக கோவில்களை அரசிடம் இருந்து விடுவித்து தனித்து இயங்கும் வகையில் தனி வாரியம் அமைக்க வலியுறுத்தி செப்டம்பர் 9 ம்தேதி மாநிலம் முழுவதும் துறவிகள் யாத்திரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ராமர் சேது, ராமஜென்ம பூமி, கோவில்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து அரசை வலியுறுத்தி யாத்திரை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications