காரில் சுற்றிய 6 அகதிகள் கைது - புலிகளா?
சென்னை: சென்னையில் காரில் இரவில் சுற்றிய 6 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக போலீஸார் தீவிர ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சில விடுதலைப் புலிகள் சிக்கியுள்ளனர். முக்கிய பிரமுகரான தம்பி அண்ணன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று இரவு 6 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, திருமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேகமாக வந்த ஒரு டாடா சுமோ காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த காரில் 6 பேர் இருந்தனர்.
விசாரணையில், 6 பேரும் இலங்கை தமிழர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் செல்வம், பிரதீபம், அருள்தாஸ் ஆகிய 3 பேரும் புழலையடுத்த காவாங்கரை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
தினேஷ்குமார், சால் ஆகிய 2 பேர் செங்குன்றத்தையடுத்த வடகரை என்னும் இடத்தில் வசித்து வரும் தகவல் விசாரணையில் வெளியானது.
இவர்கள் 5 பேரும் அண்ணாநகர் பகுதியிலுள்ள திருமங்கலம் வசந்தம் காலனியில் வசிக்கும் தனுஷன் என்ற தங்களது நண்பரை அந்த காரில் அழைத்து கொண்டு வந்ததாக போலீசிடம் தெரிவித்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது அடிக்கடி இப்படி காரில் சுற்றுவது வழக்கம் என்று ெதரிவித்துள்ளனர். இருப்பினும் போலீஸார் காரை சோதனையிட்டதில் அதன் உள்ளே ஒரு நம்பர் பிளேட் கிடைத்தது.
தங்களது காரில் இருந்த நம்பர் பிளேட் பழையதாகி உரிந்துவிட்டதால் புதிய பிளேட்டை பொருத்த இதை எடுத்து செல்வதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் காருக்குள் கிடந்த நம்பர் பிளேட்டை சோதனையிட்டதில் அது வேறு வாகனத்தின் பதிவு எண் என்பது தெரிந்தது.
இதையடுத்து 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்த போலீஸார், யார் யாருடன் அவர்கள் தொடர்பு வைத்துள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அகதிகள் முகாமிலிருந்து எப்படி இவர்கள் வெளியேறினர், இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications