திண்டுக்கல் அருகே ஜமாத் நிர்வாகி கடத்தல்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஜமாத் நிர்வாகி கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கோடாங்கி நாயக்கன்படி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் முகமது சித்திக். இவர் ஏற்கனவே அந்த ஊர் ஜமாத்தில் முக்கியப் பெறுப்பில் இருந்துள்ளார்.
அப்போது ஜமாத்தில் பணம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதனால் ஜமாத் நிர்வாகியான அபுபக்கருக்கும், முகமது சித்திக்கிற்கு இடையே பிரச்சனை வெடித்தது.
இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு அபுபக்கரை முகமது சித்திக்கின் ஆட்கள் அடித்து உதைத்து அடியாட்கள் உதவியோடு காரில் கடத்தி விட்டாதக கூறப்படுகிறது.
இதனால் ஜமாத் நிர்வாகிகளும், அப் பகுதி பொது மக்களும் திரண்டு மாவட்ட கலெக்டர் வாசுகியிடம் புகார் மனு கொடுத்தனர்.
அவர்களிடம் இந்த பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் வாசுகி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications