For Daily Alerts
Just In
அதிமுக எம்.பி மலைச்சாமி வீட்டில் கொள்ளை
சென்னை: மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் மலைச்சாமியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெட்டகத்தை உடைக்க முயன்று தோல்வியுற்றதால், கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர்.
அதிமுக ராஜ்யசபா எம்.பி. மலைச்சாமி. இவரது வீடு சென்னை அண்ணா நகர், சாந்தி காலனி பகுதியில் உள்ளது.
மலைச்சாமி வெளியூர் போயுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த பெட்டகம் ஒன்றை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதை உடைக்க முடியவில்லை.
இதையடுத்து வீட்டின் வரவேற்பறையில் இருந்த கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டனர்.
மலைச்சாமி வந்த பிறகுதான் வீட்டிலிருந்து என்னென்ன பொருட்கள் திருட்டுப் போயுள்ளது என்பது தெரிய வரும்.
Story first published: Monday, August 11, 2008, 14:54 [IST]